தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறுக்கி அருகே அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பூசணிக்காய், எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
தேய்பிறை அஷ்டமி
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் காலபைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் ஆகியன நடந்தது. காலபைரவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
விளக்கு ஏற்றி வழிபாடு
பூசணிக்காய் மற்றும் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி ஏராளமான பெண்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுநடந்தது. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்பங்கேற்றனர்.
No comments:
Post a Comment