கிருஷ்ணகிரியில் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பாராட்டு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 9 February 2022

கிருஷ்ணகிரியில் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பாராட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பணிபுரிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் பொதுமக்களின் பிரச்சினைகளையும் மனுக்களையும் பெற்று நேரில் சென்று ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்த்து வைப்பார்.

சூளகிரி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை மேற்க்கொண்டு பல்வேறு நிதி திட்டங்கள் மூலம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமார் பின்னர் பணிமாறுதல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து தளி சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர்  தளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் குறைகளையும்  மனுக்களையும் பெற்று நடவடிக்கைகளை மேற்க்கொண்டு அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

விமல் ரவிக்குமார் தொடர்ந்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து வரும் வட்டார வளர்ச்சி அலுவலர் விமல் ரவிக்குமாரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் 2022 ஜனவரி 26 இந்திய 73 வது குடியரசு தினத்தன்று 
மாவட்ட திட்ட இயக்குநர் முன்னிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி அவர்களால் சிறந்த வட்டார வளர்ச்சி அலுவலராக  விமல் ரவிக்குமார் தேர்வு செய்யப்பட்டு நற்சான்றிதழ் வழங்கி கௌரவ படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad