போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை மேயர் பாராட்டினார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 28 March 2022

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை மேயர் பாராட்டினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மாநில வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற 
ஓசூர் ஈகில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வாலிபால் பயிற்சிபெறும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கடந்த 26-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 

இப்போட்டியை நடத்தியவர் லைஃப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சென்னை. இந்த போட்டியில் சென்னை வேலூர் சேலம் ஆத்தூர் ஓசூர் மதுரை திருச்சி கோயம்புத்தூர் மற்றும் பல மாவட்டத்திலிருந்து வீரர்-வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இதில் ஓசூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர். ஓசூர் மேயர் திரு எஸ். ஏ. சத்யா அவர்கள் இவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் அரசனட்டி ரவி, M.K.வெங்கடேஷ், நிஷார் , 
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் கழக ஆசிரியர் தலைவர் செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இவர்களுக்கு பயிற்சி அளித்த ஈகில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் தாயுமானவன் மற்றும் மாணிக்கவாசகம் ஆகியோரையும் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad