அடையாளம் தெரியாத வாகனம் மோதி இராணுவ வீரர் பலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 3 March 2022

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இராணுவ வீரர் பலி

வேலம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள மாரி செட்டி அள்ளி கிராமம் ஜக்குகொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் அறிவழகன் 35 ராணுவ வீரரான இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இராணுவ விடுப்பில் தனது ஊருக்கு வந்த இவர் மளிகை பொருட்கள் வாங்க இன்று மாலை காவேரிப்பட்டினம் சென்றதாக தெரிகிறது பின்னர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு வரும்பொழுது தள்ளி அள்ளி தென்பெண்ணை ஆற்று பாலம் அருகே வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிலை தடுமாறி அருகில் இருந்த இரும்பு தடுப்பு மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சந்துரு உடலை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad