சூளகிரி அருகே
போதிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சானமாவு ஊராட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.
சானமாவு ஊராட்சியில் தொடர்ந்து ஒருவருட காலமாக கழிவுநீர் கால்வாய் வசதி தெருவிளக்குகள் , குடிநீர் இன்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தங்களது கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு குறைகளை கூறினாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் கழிநீர் கால்வாய் வசதி இன்றி சாலையிலே கழிவுநீர் செல்வதால் பல நோய்த்தொற்றுகள் ஏற்ப்பட்டு மாதம் இருமுறை அரசு சுகாதார நிலையத்திற்க்கு சென்று வருவதாக அப்பகுதி பெண்கள் கூறுகின்றனர்.
தங்கள் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைத்து , குடீநீர் சீராகவும், தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என சானமாவு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment