ஒசூரில்
இரண்டு ஆண்டுக்கு பிறகு பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பிரசித்தி பெற்ற கோட்டைமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் கொரோன ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்சியாக நடைபெற்றது இந்த திருவிழாவில் தமிழகம், கர்நாடகா ,ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர் ராம்நகரில் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் மாவிளக்கு திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டு மாவிளக்கு திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடந்து இன்று மாவிளக்கு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் செய்யப்பட்டன முக்கிய நிகழ்வாக அலகு குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் தங்களது உடலில் வாயிலும், முதுகிலும் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர் இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது அதேபோல விமான அலகில் அந்தரத்தில் தொங்கியவாறு பக்தர்கள் அலகு குத்தி கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர் மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டும், பொங்கலிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நேர்த்திகடனாக அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது இந்த திருவிழாவில் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவை முன்னிட்டு ஒசூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment