பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 10 May 2022

பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, மின்சார வசதி, தையல் எந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 186 மனுக்கள் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட வருவாய் அலுவலர் மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் 3 இருளர் இன மக்களுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், ஓசூர் தாலுகாவை சேர்ந்த 4 பேருக்கு விதவை ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், ஓசூர் மாநகராட்சி சூர்யா நகரை சேர்ந்த மாணவி நவுமியாவுக்கு கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad