பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 May 2022

பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு



வேப்பனப்பள்ளி அருகே பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஒ என் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் 35 வேப்பனபள்ளியிலுள்ள சிட்டி சப்ளையர்ஸ் இன்னும் கடையில் எலக்ட்ரீசியன் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று மாலை அவரது கடையில் மீன் ஒயர்களை சரி பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவிசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இடத்தை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து வேப்பனப்பள்ளி போலிசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். பணி பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad