ஓசூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது நீர்நிலைகள் வேகமாக நிறம்பி வரும்நிலையில்
தாழ்வான பகுதிகளான வார்டு எண்-11, 12 வசந்த் நகர், ராஜீவ் நகர் 7 ஹில்ஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மாநகரில் மழைநீரால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் விரைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் சென்னீர், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment