பேரிகை அருகே உலக தாய்ப்பால் தின வார விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அங்கன்வாடி மையத்தில் உலக தாய்ப்பால் வார விழா தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்பார்வையாளர்கள் சிவகாமி ,புஷ்பா அவர்கள் கலந்து கொண்டனர். என் ஜி ஓ அமைப்பிலிருந்து சத்தியா கலந்து கொண்டார். மற்றும் கிராம சுகாதார செவிலியர் ரேவதி, ஜெயா தலை மேலான அங்கன்வாடி பணியாளர்கள் முனிரத்னா விஜி, பத்மா மஞ்சுளா, நரசம்மா, வித்யா ராணி சாரதா, கீதா, சசிகலா போன்ற எண்ணற்றோர் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நலக்கல்வியாளர் எம் சப்தமோகன் அவர்கள் கலந்துகொண்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்தும் அதன் மகத்துவம் குறித்தும் அதில் உள்ள மூடநம்பிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
இதில் ஏராளமான பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment