தொழிற்சாலைகளில் வட மாநிலத்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு? - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 25 September 2022

தொழிற்சாலைகளில் வட மாநிலத்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு?

*சூளகிரி பகுதி அனைத்து தொழிற்சாலைகளிலும் வட மாநிலத்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளூர் இளைஞர்கள் தவிர்ப்பு*


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தற்போது வளர்ந்து வரும் நகரமாகிறது பல தொழிற்சாலைகளும் சிப்காட்களும் அரசு சார்பில் பல துறைகளும் சூளகிரியில் இடம்பெறுகின்றன கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தற்போது சுற்றுவட்டார பகுதியில் 80க்கும் மேற்பட்ட அனைத்து வித தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது

 இந்த தொழிற்சாலைகளில் 100% வட மாநிலத்தவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு எனக் கூறி தொழிற்சாலை இயக்குகின்றனர் பின்னர் தொழிற்சாலையில் வடமாநிலத்தவர்களை மட்டுமே வைத்து பணி செய்கின்றனர் இதனால் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்றி தவிர்த்து தவிர்த்து வருகின்றனர்.

 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று சூளகிரி வட்டார சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad