மாணவர்களுக்கு தலைக்கு எண்ணெய் வைத்து ஒழுங்காக தலை சீவிவிட்ட ஆசிரியர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 22 September 2022

மாணவர்களுக்கு தலைக்கு எண்ணெய் வைத்து ஒழுங்காக தலை சீவிவிட்ட ஆசிரியர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் திரு.G. முருகன் அவர்கள் பனிரெண்டாம் வகுப்பு வரலாறு பிரிவு மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது தலைக்கு எண்ணெய் வைத்து ஒழுங்காக தலை வாரி வருவதில்லை என்பதால் மாணவர்களுடன் எப்போதும் அன்போடு பழகும் காரணத்தினால் மிகுந்த பாசமுடன்இன்று தானே எண்ணெய் பாட்டில் வாங்கி வந்து மாணவர்களுக்கு எண்ணெய் வைத்து புது வித முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

மாணவர்களும் இதை பணிவுடன் ஏற்றுக் கொண்டனர். இது போன்ற சமூக பணிகளில் ஆசிரிய பெருமக்கள் ஈடுபடுவது வருங்கால மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்த உதவும். ஆசிரியருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad