இவருடைய மகன் பார்த்திபன் (வயது 22). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் சதானந்தன் மகன் முத்துராஜ் (21). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் நேற்று மாலை பார்த்திபன், முத்துராஜ் மோட்டார் சைக்கிளில் கெலமங்கலம் சென்றனர். பின்னர் மாலை அவர்கள் முத்தம்பட்டிக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பார்த்திபன் ஓட்டினார். நல்லராலப்பள்ளி பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் பஸ்சை பார்த்திபன் முந்த முயன்றார்.

அப்போது எதிரே வேகமாக வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீதுமோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார் டிரைவர் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துராஜ் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment