காவேரிப்பட்டணம் அருகே தனியார் வங்கி பெண் ஊழியர் தற்கொலை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 12 November 2022

காவேரிப்பட்டணம் அருகே தனியார் வங்கி பெண் ஊழியர் தற்கொலை.


காவேரிப்பட்டணம் அருகே தனியார் வங்கி பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். வங்கி பெண் ஊழியர் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவருடைய மனைவி ஷியாமளா (வயது 31). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். 

இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் வயிற்று வலி பூரணமாக குணமடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். மேலும் கடந்த மாதம் 24-ந் தேதி தனதுவீட்டில் விஷம் குடித்தார். பலி அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 


அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஷியாமளா பலியானார். இதுகுறித்து ஷியாமளாவின் தாய் மாது, காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment

Post Top Ad