கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சூளகிரியை அடுத்த தொட்டூர் கிராமத்தில் 5வது நடைபெற்று வருகின்றது.
இந்த முகாமில் ஓசூர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் சூளகிரி அரசு மருத்துவமனை சித்த மருத்துவம் சார்பில் கபசர குடிநீர் மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைகள், மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment