கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 30 July 2023

கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  புதியதாக மண்டல செயலாளர் மண்டல துணை செயலாளர்கள்  மற்றும் மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்   கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மண்டல செயலாளர் தமிழ்அன்வர் மண்டல துணை செயலாளர்கள் ஜிம்மோகன் மாயவன் முன்னிலையில்  டாக்டர் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து  கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் பட்டாசு குடோனில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் மாதேஷ் தொகுதி செயலாளர் தியாகு வேப்பனப்பள்ளி தொகுதி துணை செயலாளர் முனிச்சந்திரன் ஒன்றிய செயலாளர்கள் ஆலப்பட்டி ரமேஷ், பாக்யராஜ், சசிகுமார், இடிப்பள்ளி கிருஷ்ணன், மாது, நிர்வாகிகள் சிவக்குமார், ஜெய்சங்கர், முனியப்பன், ரகு, வேங்கை வளவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் நகர செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad