கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மரண குழிகள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 25 September 2023

கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலையில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் மரண குழிகள்.

ரியல் எஸ்டேட் அதிபர்களை கையில் வைத்துக்கொண்டு கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணிகளை கவனிக்காமல் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள்.



கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அந்தேரிப்பட்டி கூட்ரோடு HP பெட்ரோல் நிலையம் அருகில் சுமார் 5 அடிக்கு மேலாக பள்ளம் சாலையின் ஓரத்தில் இருப்பதால் இருசக்கர வாகன சொல்லும் பாதையில் அதிக கற்கள் தண்ணீரால் அடித்து வரப்பட்டு சாலையில் கிடக்கின்றன இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது இதை பற்றி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் இதே வழியாகத்தான் சென்று வருகிறார்கள் ஆனால் இவற்றையெல்லாம் இவர்கள் கண்டு கொள்ளவில்லை ஏனென்றால் அருகில் இருப்பது ரியல் எஸ்டேட் அதிபர்களின் சொத்து அதனால் இங்கு ஏதேனும் மண் எடுத்தாலோ தொந்தரவு செய்தாலோ இவர்களின் செல்வாக்கு குறைந்துவிடும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்து எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த இடத்தை ஆய்வு செய்து இந்த விபத்தை ஏற்படக்கூடிய மரண குழியை மூடி இடையூறு இன்றி சாலையில் இருசக்கர வாகனங்கள் சென்றுவர நடவடிக்கை எடுப்பார்களா சமூக ஆர்வலர்கள் மற்றும் இங்கு இருக்கும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு????


குறிப்பு.  அந்தேரிப்பட்டி ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் அனுமதி இல்லாமல் வீட்டுமனை பட்டாக்களாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது!!!



- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்  எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad