சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கிட்ட நாயால் திடீரென நிறுத்தப்பட்ட கார்: கார்,கண்டெய்னர் லாரி, அரசு பேருந்து அடுத்து மோதிக்கொண்டதில் 5பேர் படுகாயம், போக்குவரத்து நெரிசல். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 February 2024

சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கிட்ட நாயால் திடீரென நிறுத்தப்பட்ட கார்: கார்,கண்டெய்னர் லாரி, அரசு பேருந்து அடுத்து மோதிக்கொண்டதில் 5பேர் படுகாயம், போக்குவரத்து நெரிசல்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரி அடுத்த அழகுபாவி என்னுமிடத்தில் ஒசூர் நோக்கி வந்த கார் ஒன்று நாய் சாலையை கடந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் நிறுத்தப்பட்டதால், பின்னால் சீரான வேகத்தில் கண்டெய்னர் லாரியும், அதன்பின் அரசு பேருந்தும் அடுத்தடுத்து மோதிக்கொண்டதில் 5 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூளகிரி போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சூளகிரியில் உள்ள 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் அனுமத்தித்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து அதில் அனுப்பி வைத்தனர்.


பின்னர் இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் 5 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்றன, இதனயெடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad