ஓசூரில் 4 வயது சிறுமி சாதனை ! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 March 2024

ஓசூரில் 4 வயது சிறுமி சாதனை !

ஒசூர் அருகே 1 நிமிடத்தில் தேசிய கொடிகளை பார்த்து 54 நாடுகளின் பெயர்களை கூறி இந்திய புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது குழந்தை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அம்ரேஷ் - நந்தினி தம்பதியின் மூத்த மகள் லக்சனா(4)… லக்சனா தனியார் பள்ளியில் மழலை (Pre - KG) வகுப்பை படித்து வருகிறார்.


சிறுவயது முதல் சுறுசுறுப்பாகவும் புதியவை கற்ப்பதில் ஆர்வமுடன் இருந்து வரும் நிலையில் உலக நாடுகளின் தேசிய கொடிகளை காண்பித்தாலே அந்நாட்டின் பெயரை யோசிக்காமலும், சரியாகவும் கூறி வருகிறார்.


லக்சனாவின் திறமையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் என்னும் உலக சாதனை அமைப்பு, 1 நிமிடத்தில் 54 உலக நாடுகளின் பெயர்களை கூறியதை  உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது. 4 வயது குழந்தையின் திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad