விஜயகாந்த் உருவ சிலைக்கு கும்பாபிஷேகம்- கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்ட தொண்டர்கள். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 9 March 2024

விஜயகாந்த் உருவ சிலைக்கு கும்பாபிஷேகம்- கற்பூர தீபாராதனை காட்டி வழிபட்ட தொண்டர்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் கிராமத்தில் காலஞ்சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருஉருவ சிலைக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. காட்டாகரம் கிராமத்தை சேர்ந்தவர் கீதா. இவர் இக்கிராமத்தில் ஓம்சக்தி ஆலயம் கட்டி அதனை பராமரித்து வருகிறார்.யூ டியூபில் விடியோ பதிவிட்டு, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். இந்நிலையில் இவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேல் கொண்ட பற்று காரணமாக அவரின் 5 அடி திருஉருவ சிலை நிறுவி, இன்று அச்சிலைக்கு கும்பாபிஷேகம் செய்தார்.

காட்டாகரம் பகுதியில் விஜயகாந்துக்கு திருஉருவ சிலை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது உருவ சிலைக்கு கும்பாபிஷேகம் செய்து அதனை யூடியூபில் மட்டுமே வெளியிட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜயகாந்த் பற்றாளர்கள் இன்று விழாவிற்கு வந்திருந்தனர்.திருப்பூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். கும்பாபிஷேக விழா மேள தாளங்களுடன் நிறைவடைந்த நிலையில், விஜயகாந்துக்கு கற்பூர தீபாராதனை செய்து தொண்டரகள் வழிபட்டனர். 


அனைத்து மக்களும் கேப்டனின் அருள் பெற வேண்டுமென்ற நோக்கத்தில், அவருக்கு கோவில் வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டதாக கீதா தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad