சூளகிரி பேருந்து நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 3 March 2024

சூளகிரி பேருந்து நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்பட்டது.


தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதியன்று  போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில்  போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பேருந்தா நிலையில் மார்ச் 3 தேதி அன்று காலை 7 மணியளவில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போடப்பட்டது. இந்த முகாமில் சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா, சூளகிரி அரசு மருத்துவர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் தினேஷ், சூளகிரி பஜார் தெரு வார்டு உறுப்பினர் அப்சர், சூளகிரி கொசு ஒழிப்பு பணியாற்றினார் உள்ளிட்ட பலர் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad