குமரியில் கடத்திய சிறுமி ஓசூரில் மீட்பு வாலிபருக்கு போக்சோ. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 3 March 2024

குமரியில் கடத்திய சிறுமி ஓசூரில் மீட்பு வாலிபருக்கு போக்சோ.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில், தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிளை  பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர்  கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்தார். இங்கு அருகில் உள்ள ஒரு மகளிர் தையல் பயிற்சி நிலையத்தில் சென்று  வந்தார்.

கடந்த 22 ஆம் தேதி தையல் பயிற்சிக்கு சென்ற சிறுமி மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்தனர். இந்த நிலையில் சிறுமி ஓசூரில் ஒரு வாலிபருடன் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் ஓசூர் சென்று சிறுமி மற்றும் வாலிபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.


விசாரணையில் அந்த வாலிபர் காரங்காடு பகுதி சேர்ந்த அபிஷேக் என்பதும், அபிஷேக்கும் சிறுமியும் கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததும் தெரிந்தது. பின்னர் போலீசார் அபிஷேக் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad