சூளகிரியில் ஆபத்தான சாலை வளைவு!; தொடர் விபத்துகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 20 April 2024

சூளகிரியில் ஆபத்தான சாலை வளைவு!; தொடர் விபத்துகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி நுழைவு சாலையால் தொடர் சாலை விபத்துகள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சூளகிரியில் ஆபத்தான நுழைவு சாலை அமைந்துள்ளது..சூளகிரிக்கு ஏராளமான வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சூளகிரி உள்ளே நுழைய வாகனங்கள் வேகமாக வளைவுபகுதியில் இருந்து உள்ளே வருவதால் பிரதான சர்வீஸ் ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகிறது..


இதன் சம்மந்தமாக வாகன ஓட்டிகள் தெரிவித்தது, சூளகிரி உள்ளே நுழைய தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரதான சர்வீஸ் சாலை அதற்காக அமைக்கப்பட்டுள்ளது.. பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துவதில்லை இதற்க்கு மாறாக சில 4 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரிக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுலபமாக நுழைய ஆபத்தான வளைவு பகுதி அமைந்துள்ளது.. இந்த வளைவு காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சூளகிரிக்கு வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருவதாக அடிக்கடி வழக்கமாக இருந்தது வருகிறது.

இந்த ஆபத்தான வளைவு பகுதியில் தொடர்ந்து விபத்துகளை தடுத்திட தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சூளகிரி உள்ளே நுழைய இந்த ஆபத்தான வளைவு அடைத்து, இதற்க்காக சூளகிரி உள்ளே நுழைய ஒதுக்கபட்ட சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டும்.. மேலும் இதற்க்கு மாறாக ஆபத்தான வளைவு பகுதி அருகே சர்வீஸ் ரோட்டில் வேகத்தடைகள் அமைத்து அதற்கான‌ பெயர் பலகைகள் வைத்து விபத்துகளை தடுத்திட தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என‌ வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad