ஓசூர் அருகே பணம் கேட்டு தகராறு ஒருவர் கைது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

ஓசூர் அருகே பணம் கேட்டு தகராறு ஒருவர் கைது.





ஓசூரில் பணம் கேட்டு தகராறு செய்த  நபர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலைய பகுதியில் பெரியார் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் எதிரியிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கி ஐந்தாயிரம் ரூபாய் திருப்பி கொடுத்தில் மீதி பணம் கேட்டு பிரச்சினை செய்து வந்த நிலையில்  22.02.2022 ஆம் தேதி பெரியார் நகர் மோகன் என்பவரது வீட்டின் அருகில் எதிரி ராமகிருஷ்ணனிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை கேட்ட போது தாமதமாக தருவதாக கூறியதால் எதிரி ராமகிருஷ்ணனின் சட்டையை பிடித்து கொண்டு  கெட்ட வார்த்தைகளால் திட்டி தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால்  ராமகிருஷ்ணனின் வலது உள்ளங்கையில் ரத்த காயம் ஏற்படுத்தி அதே கத்தியை காட்டி பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக 23.02.2022 ஆம் தேதி ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad