கிருஷ்ணகிரியில் திருடு போன செல்போன்கள் பறிமுதல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

கிருஷ்ணகிரியில் திருடு போன செல்போன்கள் பறிமுதல்

 


கிருஷ்ணகிரி அருகே 5 லட்ச ரூபாய் மதிப்பிலான திருடுபோன செல்போன்களை மீட்ட காவல்துறையினர்

  கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் IPS அவர்களின் உத்திரவின் பேரில் திரு.விவேகானந்தன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டதில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 46 செல்போன்கள் தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டு உரியவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்து செல்போன் தொலைந்தாலோ,பறித்துச் சென்றுவிட்டாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படியும், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad