கிருஷ்ணகிரி அருகே லாரி விபத்து உயிர் தப்பிய கிராம மக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 24 February 2022

கிருஷ்ணகிரி அருகே லாரி விபத்து உயிர் தப்பிய கிராம மக்கள்



வேப்பனப்பள்ளி அருகே கவிழ்ந்த கிரனைட் கல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து. நூலியிழையில் உயிர் தப்பிய கிராம மக்கள்



கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அரியனப்பள்ளி கிராமத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கொண்டு சூளகிரிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது அரியனப்பள்ளி கிராமத்தில் ஊருக்கும் வரும் போது வெங்கடேஷ் தாஸ் என்பவரின் வீட்டின் முன்பு  பாரம் தாங்கமால் லாரியும் கிரனைட் கல்லும் கவிழ்ந்தது. அப்போது வீட்டின் அருகே இருந்த கிராம பெண்கள் சுதாரித்து கொண்டு நூலிழையில் ஓடி உயிர் தப்பினர். 

வீட்டின் முன்பு அதிர்ஷ்டவசமாக கிரனைட் கல் கவிழ்ந்து நின்றது. தினம் தினம் 50 க்கும் மேற்பட்ட கிரனைட் கற்களை ஏற்றிவரும் இது போன்ற லாரிகள் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்துவது 2 முறையாகும்.  இரண்டு முறையும் அதிர்ஷ்டவசமாக கிராம மக்களுக்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இசம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad