கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு முதல் கட்டமாக 5 நபர்களுக்கு இலவச ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் நோயாளிகளுக்கான பொருட்களை மருத்துவர் M.வெங்கட்ராஜ் அவர்கள் வழங்கினார். சூளகிரி STS திரு.சண்முகம் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் தொண்டு அறக்கட்டளை நிறுவனத்தின் செயலாளர் திரு.கௌதம் அவர்களின் சார்பாக இலவச ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. ROAD தொண்டு நிறுவனத்தின் மூலமாக திருமதி.சகுந்தலா அவர்கள் ஒருங்கிணைப்பு செய்தார். சூளகிரி JCI தலைவர் திரு.JCI லோகேஷ் அவர்கள் நிகழ்வில் பங்கேற்றோர்க்கு தேனீர் மற்றும் பிஸ்கட்களை வழங்கினார். இறுதியாக உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் திரு.மு.சம்பத்குமார் காசநோய் குறித்த விழிப்புணர்வு செய்து நிகழ்வை நிறைவு செய்தார்.
No comments:
Post a Comment