சூளகிரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை பெங்களூர் நாராயண நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் முகாம் அமைக்கப்பட்டது.
டைட்டான் கம்பெனி லிமிடெட் ஓசூர் மற்றும் நாராயண நேத்ராலயா பெங்களூர் ,மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிருஷ்ணகிரி ஆகியோர் ஒருங்கிணைந்து முகாம் நடத்தப்பட்டது.
செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராம மக்களும் கண் பரிசோதனையை முகாமில் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment