கல்லூரி மாணவர்களுடன் உயிரூட்டல் அறக்கட்டளை பயிலுநர் பயிற்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 27 March 2022

கல்லூரி மாணவர்களுடன் உயிரூட்டல் அறக்கட்டளை பயிலுநர் பயிற்சி

அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு
உயிரூட்டல் அறக்கட்டளை சார்பாக உள்ளக பயிலுநர் பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் செயல்படும் உயிரூட்டல் அறக்கட்டளையில் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நோக்கங்கள், அதன் நிறுவன வடிவங்கள், நிதி ஆதாரங்கள், விரிவாக்க நடவடிக்கைகள், இலக்கு குழுக்களைத் தொடர்பு கொள்ளும் முறை மற்றும் விவசாய வணிகம் குறித்து 5 நாள் பயிற்சியாக 10 பேர்க் கொண்ட மாணவர் குழு உயிரூட்டல் அறக்கட்டளை அலுவலகத்தில் கலந்துக் கொண்டனர், முதல் நாளான இன்று நான்கு அமர்வுகளாக கூட்டம் நடைப்பெற்றது.

 முதல் அமர்வில் உயிரூட்டல் அறக்கட்டளை தலைவர் திரு.குமார் அவர்களும் இரண்டாவது அமர்வில் சூளகிரி அரசு சித்த மருத்துவர் திருமதி.கீதா அவர்களும் மூன்றாவது அமர்வில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் திரு.கணேசன் அவர்களும் இறுதியாக நான்காவது அமர்வில் உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் திரு.மு.சம்பத்குமார் அவர்களும் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad