முன்விரோதம் காரணமாக தகராறு செய்த நபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த
மத்தூர் காவல் நிலைய பகுதியில் கொக்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த எதிரிக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், 24.03.2022 ஆம் தேதி சண்முகம் சாலூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த எதிரி சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரது சட்டையைப் பிடித்து கன்னத்தில் அடித்து, கொலை மிரட்டல் விடுத்ததாக சண்முகம் மத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் எதிரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment