JCI ஜுனியர் தொடக்க விழா நடைப்பெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 25 March 2022

JCI ஜுனியர் தொடக்க விழா நடைப்பெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன எலசகிரி, பாலாஜி நகரில் செயல்பட்டு வரும் பாரதியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் ஒசூர் பிரிந்தாவன் நகர் JCI சார்பாக ஜூனியர் ஜே சி ஐ தொடக்க விழா  சிறப்பாக நடைபெற்றது. 

இதில்பாரதியார் மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஸ்ரீ ஹரிஸ்வர் ஜூனியர் ஜே சி ஐ தலைவராக தேர்ந்துதெடுக்கபட்டார். இந்நிகழ்ச்சிக்கு ஒசூர் பிரிந்தாவன் நகர் தலைவர் ஜே சி மஞ்சுநாத் தலைமை தாங்கினர். ஜே சி மண்டல இயக்குநர் ஜே சி இளவரசன் மற்றும் பாரதியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் அரிமா திரு நாகராஜன் ஆகியோர் சிறப்புஅழைப்பாளர்களாக வருகை புரிந்தனர்.

 பள்ளியின் முதல்வர் வெங்கடேஷ் பாபு முன்னிலை வகித்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக ஜூனியர் ஜே சி தலைவராக தேர்ந்துதெடுக்கப்பட்ட JJC ஸ்ரீ ஹரிஸ்வர் தலைமையில் சின்ன எலசகிரி பகுதியில் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு பேரணி பள்ளி மாணவர்களால் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியைகள் திருமதி. சுகன்யா, திருமதி. லட்சுமி, திருமதி. புஷ்பலதா, திருமதி. சத்யா ஆகியோர் மற்ற ஆசிரியைகளின் உதவியோடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad