கிருஷ்ணகிரியில் இரண்டு சக்கர வாகனம் திருடிய நபர் கைது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 8 March 2022

கிருஷ்ணகிரியில் இரண்டு சக்கர வாகனம் திருடிய நபர் கைது


வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடிய இரண்டு நபர்களை துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறையினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெள்ளை குட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் 07.03.2022 ஆம் தேதி அவரது மனைவியுடன் வெளியூரில் இருந்து அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்ததாகவும், கிருஷ்ணகிரி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராஜ் தாபா அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திய போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ.500/- ஐ பிடுங்கிச் சென்று விட்டதாக பர்கூர் காவல் நிலையத்தில் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளியில் முனிராஜ் என்பவர் 06.03.2022 ஆம் தேதி வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு சென்றதாகவும் மறுநாள் காலை எழுந்து வந்து பார்க்கும்போது வண்டியை காணவில்லை என கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடிய இரண்டு நபர்களை 07.03.2022 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad