கோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்
சேலம் கோகுல்ராஜ் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவியுடன் பழகி வந்தநிலையில் 2015அன்று பள்ளிபாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் ரயில்வேநிலையத்தில் தலை துண்டித்து உயிரிழந்து கிடந்தார்..
தற்கொலையாக இருக்கும் என சந்தேகித்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள்,இடது சாரிகளின் போராட்டத்தால் வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 17 குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்த நிலையில்
கடந்த மார்ச் 4 அன்று, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரை குற்றவாளிகள் என அறிவித்த நீதிமன்றம் இன்று, தண்டனையை அறிவித்தது..
சாதி ஆணவக்கொலையாக கோகுல்ராஜ் கொல்லப்பட்ட நிலையில் நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்று
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசு வெடித்து நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றனர்
வேப்பனஹள்ளி தொகுதி செயலாளர் செம்பட்டி சிவா தலைமையில் 20க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்பு
No comments:
Post a Comment