உத்தனப்பள்ளியில் மருத்துவ காப்பீடு திட்டம் விழிப்புணர்வு
தமிழக முதலமைச்சரில் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏறப்படுத்தப்பட்டது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் உத்தனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட லாலிகல் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது மேலும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மருத்துவ அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லஷ்மி காந்த் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருந்துவ அட்டையை வழங்கினார்.
No comments:
Post a Comment