சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது. 150லிட்டர் ஊறல் மற்றும் 30லிட்டர் சாராயம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி காவல் நிலைய பகுதியான கிட்டம்பட்டி ஏரிக்கரையில் எதிரிக்கு சொந்தமான மீன் கடை அருகில் சாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து 150 லிட்டர் ஊறல் மற்றும் 30 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment