அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள், உயிரூட்டல் அறக்கட்டளையில் உள்ளக பயிலுநர் பயிற்சியில் பங்கேற்று குஷி கிளினிக் மூலம் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உள்ளக பயிலுநர் பயிற்சிக்காக உயிரூட்டல் அறக்கட்டளையில் பயிற்சி பெற்று வந்தனர், அவர்களின் மூன்றாவது நாளாகன இன்று 4 வது அமர்வில் குஷி கிளினிக் சார்பாக எச்.ஐ.வி குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அவசியத்தை விளக்கினர். இந்த நிகழ்விழ் இந்தியன் மீடியா & பிராஸ் கிளாப் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜ் அவர்கள் பத்திரிகை சுதந்திரம் பத்திரிகையாளர்களின் அர்ப்பணிப்பு குறித்து பேசினார். இந்த நிகழ்வில் குஷி கிளினிக் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுப்பிரமணி, ஆலோசகர் திரு.சத்தியமூர்த்தி, JCI லோகேஷ் மற்றும் உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் திரு.மு.சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்பு செய்து கருத்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment