சட்டவிரோதமாக சூதாடிய ஏழு நபர்கள் கைது, நான்கு இருசக்கர வாகனங்கள், பணம் 25,600/- ரூபாய் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளப்பள்ளி கிராமத்தில் உள்ள சந்தை வீதி அருகில் இருக்கும் காலி இடத்தில் சட்டவிரோதமாக சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார், சூதாடிக் கொண்டிருந்த ஏழு நபர்களை சுற்றிவளைத்து கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் 25,600/- ரூபாய், சீட்டுக் கட்டுகள் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments:
Post a Comment