கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜமின்தார் கோட்டை எதிரே அமைந்துள்ள அங்கன்வாடி மையம் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு ரூபாய் 9 இலட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
முன்னதாக உள்ள அங்கன்வாடி மையத்தில் போதிய இடமும் பாழடைந்த கட்டிடமாக உள்ள நிலையில் புதிய அங்கன்வாடி மையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே கட்டப்பட்டது.
தற்போது அங்கன்வாடி மைய வெளிப்புறத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் இருப்பதால் குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி எதிரே சுற்றுச்சுவர் கட்டப்பட வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் புதிய அங்கன்வாடி மையம் 4 மாதங்களாக கட்டிடம் பூட்டிய நிலையிலே இருப்பதால் மையத்தை திறந்திட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment