சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 22 March 2022

சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிப்பு

இயற்கையில் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவம் அறியவே கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – 22ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்நாள் தண்ணீரின் சிறப்புகளைக் கூற மட்டுமல்ல, தண்ணீரின் அறியப்படாத உண்மைகள் மற்றும் தண்ணீரின் அவசியங்களை மக்களுக்கு உணர்த்துவதற்கான நாள் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பாக உலக தண்ணீர் தினத்தையொட்டி நிலத்தடி நீர் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜெயச்சந்திரன் ரெட்டி தொடங்கிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad