முன்விரோதம் காரணமாக தகராறு செய்த நபர்கள் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி காவல் நிலைய காமன்தொட்டி TO தாசனபுரம் பகுதியில் உள்ள SBM தாபா ஹோட்டல் அருகே கோபி என்பவருக்கும் எதிரிகளுக்கும் கூலி வேலை செய்த பாக்கி பணம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில் 19.03.2022ஆம் தேதி இரவு SBM தாபா ஹோட்டல் அருகே கோபி என்பவரும் சுப்ரித் என்பவரும் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த எதிரிகள் மேற்கண்ட கூலி வேலை செய்த பாக்கி பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் ஏற்பட்டு எதிரிகள் கத்தியால் கோபியின் இடதுபுற மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் தாக்கியதாகவும் கெட்ட வார்த்தையில் திட்டி கத்தியை காட்டி மிரட்டியதாக 20.03.2022 ஆம் தேதி கோபி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment