கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பேரிகை முக்கிய பிரிவு சாலையில் முனியம்மா சர்கில் பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள பெருமாள் கோயில் அருகே மிக பெரிய கழிவு நீர் கால்வாய் அமைந்துள்ளது.
தற்போது வளைவு பகுதியில் நீண்ட திறந்த வெளி கால்வாய் மூடப்படாமல் இருப்பதால் அதிகளவு வளைவு பகுதியில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் மூடப்படதா திறந்த வெளி கால்வாய் காரணமாக அதிக விபத்தில் உடல் உறுப்புகளை வாகன ஓட்டிகள் இழந்து விடுகின்றனர்.
மேலும் திறந்தவெளியில் உள்ள கழிவு நீர் கால்வாய் பகுதியை மேல் பகுதியில் மூடபடவேண்டும் என சூளகிரி பகுதி வாகன ஓட்டிகளும் , பொதுமக்களும் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment