கிருஷ்ணகிரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்து மணியாண்டப்பள்ளி கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக மண்டுமாரியம்மன் திருக்கோவில் உள்ளது.
இந்த மண்டு மாரியம்மன் கோவில் சுற்றியுள்ள நிலத்தை தனிநபர் பூபாலன் என்பவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை அமைத்து உள்ளார்.
திருவிழா காலங்களில் கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கவோ அல்லது கோவிலை சுற்றி வருவதற்கு வழியில்லாமல் உள்ள நிலையில் தற்போது பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
கோவில் எதிரே உள்ள பட்டா நிலத்தை அவர் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் கோவிலை சுற்றி உள்ள காலி இடத்தை அவர் ஆக்கிரமித்து மாட்டு கொட்டகை அமைத்து உள்ளதை பொதுமக்களுக்கும் , பக்தர்களுக்கும் இடையூறாக உள்ள மாட்டுக் கொட்டகையை அகற்ற வேண்டும் என்று மணியாண்டப்பள்ளி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார்.
No comments:
Post a Comment