உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோருக்கு உணவு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 1317 - வது நாள்
உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும்
அன்னம் பகிர்ந்திடு திட்டத்தின் மூலமாக கோமதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
இந்த உணவு வழங்கும் பணிகளை பிரகாஷ் மற்றும் உயிரூட்டல் அறக்கட்டளை தன்னார்வலர் சம்சுதீன் ஆகியோர் வழங்கினர்
உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்தளிப்பு திட்டத்திற்கு இன்றைய உணவை தயாரித்து கொடுத்த வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொங்கனப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ் கடத்தூரை சேர்ந்த குழு மற்றும் உயிரூட்டல் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் உள்ள அனுதினமும் சாலையோரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், முதியோர், பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், மற்றும் ஆதரவற்ற உறவுகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
உயிரூட்டல் அறக்கட்டளை சமூக சேவைகளை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment