வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள், மதுபானங்களை கடத்தி வந்த நபர் கைது. வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி போலீஸ் செக்போஸ்ட் அருகே ரோந்து பணியில் இருந்த சிப்காட் போலீசார் அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹16,660ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் மற்றும் ₹3,875 ரூபாய் மதிப்பிலான வெளிமாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது. வெளிமாநிலத்தில் இருந்து குட்கா பொருட்கள் மற்றும் மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து குட்கா பொருட்கள், மதுபானங்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment