அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையெடுத்து அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் விதமாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டானா பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
மேலும் இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னாதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் , பொறுப்பாளர்களும் , உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment