மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிகே பெத்தனப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஊரட்சி மன்ற தலைவர் சுஜாதா பழனி தலைமையில் நடைபெற்றது
இந்த முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி. வட்டாட்சியர் சரவணன் மற்றும் உதவி திட்ட அலுவலர் சந்தோசம். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான நல திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தனர்.
வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் ஏழை எளிய மக்களுக்கு குடும்ப அட்டைகள் மற்றும் முதியோர் ஓய்வூதியம் வட்டாட்சியர் சரவணன் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இறுதியில் பிகேபெத்தனபள்ளி ஊராட்சி மன்ற துணை தலைவர் வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment