அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பட்டியலின மக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 20 April 2022

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பட்டியலின மக்கள்

சூளகிரியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பட்டியலின மக்கள்


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள காமராஜர் காலனியில் 200 கற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களாக பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் .


சுமார் 10 வருடங்கள் சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் தெருவிளக்குகள் இன்றி பட்டியலின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்

மேலும் தங்கள் பகுதியிற்க்கு அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளித்தும் அரசு அதிகாரிகளும் , அரசியல்வாதி தலைவர்களும் தங்கள் பகுதியில் நுழைவதே இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் காமராஜர் நகரில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கழிவுநீர் கால்வாய் சீர்செய்து , சாலை அமைத்து , தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

No comments:

Post a Comment

Post Top Ad