தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 20 April 2022

தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை தீ: ஆலை முற்றிலும் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி அருகே தென்னை நார் தொழிற்சாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஆலை முற்றிலும் எரிந்து நாசமாயின.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (45). இவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள பண்ணிஅள்ளியை அடுத்த பெரம்மன் கொட்டாய் என்ற கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் தொழிற்சாலையின் வெளியே உணவருந்திக் கொண்டிருந்த போது தொழிற்சாலையிலிருந்து புகை வருவதைக் கண்டனர். உடனே, புகையை கட்டுப்படுத்த முயன்றனர். மேலும், இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.

இந்த நிலையில், தீயானது மற்ற பகுதிகளில் வேகமாக பரவத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் தொழிற்சாலை முற்றிலும் சேதம் அடைந்ததாகவும் அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad