ஓசூரில் தனியார் பள்ளிகளில் கலைகட்டும் ஆண்டு விழாக்கள்
தமிழகத்தில் கொரான நோய் தாக்கத்தால் பள்ளிகளின் நிலைமை பள்ளி மாணவர்களின் நிலைமை இரண்டு ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருந்து வந்தது , இந்த நிலையில் தமிழகத்தில் முதலமைச்சராக திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் சுகாதாரத்துறை துரித நடவடிக்கையால் கொரானா நோய்தொற்று முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது,
இதன் பின்னர் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்க தொடங்கியது இதனால் உற்சாகமடைந்த பள்ளி நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த தொடங்கியது
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 110 மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது, தேர்வு எழுதச் செல்லும் முன்பாக மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் பட்டம் அளித்து அவர்களை கவர படுத்தி வாழ்த்து தெரிவித்தது பள்ளி நிர்வாகம் , இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் உற்சாகமடைந்தனர், நிகழ்ச்சியில் பட்டமளிப்பு மட்டுமின்றி பரதநாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேறியது .
No comments:
Post a Comment