உலக மக்களின் சுகாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான உலக சுகாதார அமைப்பானது 1948ல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு அனைத்துலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணியை செய்யும் அதிகாரம் படைத்தது.
1950ம் ஆண்டு முதல் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினமாக அனுசரிக்க உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உலக சுகாதார தினத்தை நினைவு கூறும் வகையில் வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா தலைமையில் 10 கற்கும் மேற்ப்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது
No comments:
Post a Comment